தனுஷால் இன்று வரை மறக்க முடியாத பெண்.. நெகிழவைக்கும் கதை.!  - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷின் ஆரம்பகால ஒல்லியான உடலமைப்பு குறித்து பலரும் கிண்டல் செய்வது வழக்கம். இவர் காதல் கொண்டேன் திரைப்பட ஷூட்டிங்கின்போது நடந்த ஒரு மோசமான அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். 

இதுகுறித்து நடிகர் தனுஷ், "காதல் கொண்டேன் திரைப்பட படப்பிடிப்பின்போது நான் ஒரு கிழிந்த சட்டை பேண்ட் அணிந்து கொண்டு சோடாபுட்டியுடன் ஓரமாக அமர்ந்து இருந்தேன். 

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்று கேட்டார். இன்னொருவர் இவர்தான் ஹீரோ என்று என்னை கைகாட்டினார். என்னை பார்த்துவிட்டு அவர் மிகவும் மோசமாக சிரித்தார்.நீயும் ஹீரோ நானும் ஹீரோ என்று கலாய்த்தார்.

அந்த இடத்தில் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனது தோற்றம் குறித்து அனைவரும் சிரித்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், அப்போது ஒரு பள்ளி மாணவி என்னிடம் ஓடிவந்து ஒரு நோட் புக்கை காட்டி அதில் கையெழுத்து வேண்டும் என்று கூறினார். 

'நீங்கள் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்து இருந்ததை பார்த்தேன். சிறப்பாக நடித்திருந்தீர்கள். உங்கள் கையெழுத்து வேண்டும் என்று கூறினார். எனக்கு கிடைத்த முதல் ரசிகை அவர் தான். அவரை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது." என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Dhanush about His kadhal Kondean history


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->