அட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இப்படி ஒரு சென்டிமென்ட்டா.?! வெளியான நெகிழ்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர் மிகுந்த பிரபலமாக இருப்பார்கள். அப்படி முதலிடத்தில் இருந்தவர் தான் இளையராஜா. அவருக்குப்பின் ரகுமான் அந்த இடத்தில் இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.ரகுமானை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்தில் அனிருத் இருக்கிறார். 

ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று பல மொழிகளில் இசையமைத்துள்ளார். இந்தியாவிற்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்த ஆஸ்கர் நாயகன் என்று பலராலும் அழைக்கப்படுபவர். சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது தான் இருக்கும் நிலைமைக்கு அவர் வந்தார். 

மணிரத்னம் திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரோஜாதான் ஏ ஆர் ரகுமானின் முதல் படம். அடுத்தடுத்து அவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவியத் துவங்கியது. தற்போது வரை இவர் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். 

பொன்னியின் செல்வன், இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் ஆர் ரகுமான் பிசியாக இருக்கும் நிலையில் இவரது சம்பளம் குறித்து ஒருநாளும் அவர் கவலைப் பட்டதே இல்லை. மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஆஸ்கர் விருதுக்காக உருவாகும் இரவின் நிழல் படத்திலும் ஏஆர் ரகுமான் தனது பழக்கவழக்கத்தை மையமாக கொண்டு தான் இசையமைப்பதாக கூறப்படுகிறது. 

அத்துடன் அவர்கள் எந்த விதத்திலும் தொல்லை கொடுக்காமல் இசையை முழுமையாக ஏ ஆர் ரகுமானிடம் ஒப்படைத்துவிட்டு நம்பிக்கையுடன் ஒதுங்கி விடுவார்கள். எனவே, இஷ்டபடி வேலை செய்யலாம் என்ற காரணத்திற்காக இந்த படங்களில் ஏ ஆர் ரகுமான் கமிட் ஆகி இருக்கிறாராம். 

அவருக்கு பணம் எல்லாம் அடுத்த விஷயம் தான். பழக்கவழக்கம் தான் முதலில் என்று கூறப்படுகிறது. ஒரு படைப்பின் பொழுது பணமா, பழக்கமா என்று கேட்டால் முக்கியமாக அவர் பழக்கவழக்கத்தை தான் தேர்ந்தெடுப்பார் என்று கூறுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ar rahman sentiment about music direction


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->