"எங்களுக்கு இப்போ இதான் தேவை." உருக்கமாக மீனா வெளியிட்ட பதிவு.!
Meena sad Post About her husband
நடிகை மீனாவின் கணவர் ஓரிரு வாரங்களுக்கு முன்பு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இத்தகைய நிலையில், நடிகை மீனாவின் 13 வது திருமண நாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.
அந்த நேரத்தில் கணவர் இறந்து தனிமையில் இருக்கிறோம் என்று மீனா மிகுந்த கவலையில் இருந்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவையும் அவர் போட்டுள்ளார்.
அதில், "நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம். ஆனால், எங்களிடம் இருந்து உங்களை சீக்கிரமாக பறித்துக் கொண்டார்கள். ஆனால் எங்கள் இதயத்தில் நீங்கள் எப்பொழுதும் இருப்பீர்கள். உலகம் முழுவதும் இருந்து கொண்டு எங்களுக்கு ஆறுதல் கைகொடுக்கும் ரசிகர்களுக்கு நன்றி.
உங்களது ஆறுதல் தான் எங்களுக்கு இப்போது அதிகம் தேவை. இப்படிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்பம் கிடைக்க நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Meena sad Post About her husband