திருமணத்தின் போது வாழ்ந்த வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா.. மீண்டும் கரம்கோர்க்கும் ஜோடி?.!
Samantha Marriage House
மேக்கப் ஆர்டிஸ்டாக வாழ்க்கையை தொடங்கி, மிகவும் கஷ்டப்பட்டு பிற்காலத்தில் கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்தாலும், இருவரின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை.
இன்பமாக வாழ்ந்து வந்த காதல் திருமண ஜோடி, அதே வேகத்தில் தங்களின் பிரிவை அறிவித்து ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஷாக் கொடுத்தது. தங்களின் முடிவில் உறுதியாக இருந்த ஜோடி பிரிந்துவிட்ட நிலையில், இருவரின் பிரிவுக்கு பின்னர் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் திருமணம் செய்த சமயத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த வீட்டை பின் நாட்களில் அவர்கள் விற்பனை செய்த நிலையில், இருவரும் பிரிந்த பின்னர் ஐதராபாத்தில் சமந்தா வசிப்பதற்கு சரியான வீடு அமையவில்லை. இதனால் திருமணம் செய்து முடித்த சமயத்தில் வாழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்க முடிவு செய்துள்ளார். இதற்குள்ளாக அந்த வீடு வேறொருவருக்கு கைமாற்றப்பட்ட நிலையில், வீட்டை வாங்கியவரை சமாதானம் செய்து அதனை வாங்கியுள்ளார்.
இதற்காக கூடுதல் தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த வீட்டில் சமந்தா மற்றும் அவரின் தாயார் வசித்து வருவதக்கவும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.