மருமகள் குறித்து டி.ராஜேந்திரன் வெளியிட்ட தகவல்.! செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் சிம்பு 40 வயதை நெருங்கிய நிலையில் அவருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறது. அவரது குடும்பத்தினர் சிம்புவுக்கு ஏற்ற மணப்பெண்ணை தேடி வருகின்றனர். 

இத்தகைய நிலையில், நடிகர் டி ராஜேந்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், "தனது உடல்நலம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி. மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி." என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, "திருமணங்கள் அனைத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் கடவுள் எழுதினால் தான் திருமணம் நடக்கும். சிம்புவிற்கு ஒரு நல்ல பெண்ணை, நல்ல திருமகளாக, குலமகளாக என் வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளை இறைவன் அனுப்புவார். மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து கடவுளிடமும் நான் பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t rajenthiran speech in airport


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->