பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் தீவிபத்து.. 11 தொழிலாளர்கள் உடல் கருகி பலி…!
11 Dead In massive Fire Accident IN Thelungana
பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் போயகுண்டா பகுதியில் பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 கூலித் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். வேலை முடிந்து இரவு அவர்கள் குடோனில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல இரவு வேலை முடிந்து குடோனில் உறங்கி கொண்டிருந்த போதுஅதிகாலையில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது இருவரை தவிர மற்றவர்கள் அங்கு சிக்கிகொண்டனர்.
மளமளவென பரவிய தீயில் 11 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேரை காணவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலா என தெரிகிறது.
English Summary
11 Dead In massive Fire Accident IN Thelungana