பெற்றோர்களே உஷார்.. பென்சில் சீவிய 5 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதே மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்த ஆர்த்திகா என்ற பள்ளி சிறுமி 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி நேற்று மாலை வீட்டின் மொட்டை மாடியில் தனது அண்ணன் அபிஷேக் மற்றும் அக்கா அன்ஷிகாவுடன் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டுப்பாடம் செய்வதற்கு முன், வாயால் ஷார்ப்பனரைப் பிடித்துக்கொண்டு பென்சிலை சீவி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு பென்சில் தோல் சிறுமியின் தொண்டைக்குள் சிக்கியது. 

இதனால், திடீரென மூச்சு விட முடியாமல், அந்த சிறுமி மூச்சுத் திணறி தரையில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5-year-old girl dies after being bitten by a pencil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->