வகுப்பறையில் செல்போனா.? கொடூரமாக மாணவனை தாக்கிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்.!
anthra school student attacked by teacher in class room
ஆந்திரர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் தனியார் பள்ளி மாணவனை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா பென்ஸ் சர்கில் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இதில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் அந்த வகுப்பில் இருந்த மாணவன் ஒருவன் செல்போனில் இயர் போனை கனெக்ட் செய்து பாட்டு கேட்டு கொண்டு இருந்துள்ளார்.
இதன் காரணமாக, அந்த ஆசிரியர் ஆத்திரமடைந்து மாணவரை கன்னத்தில் அறைந்தும், கீழே தள்ளி காலால் எட்டி உதைத்தும் தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதலை சக மாணவன் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வெறி பிடித்தவர் போல மாணவனை எப்படி தாக்கலாம்? என்று கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
English Summary
anthra school student attacked by teacher in class room