ஒரே நேரத்தில் "வெடிகுண்டு மிரட்டல்".. அலறும் பெற்றோர்கள்.. பதறும் தலைநகரம்.!!
Bomb blast threaten in many schools in Delhi
டெல்லியில் செயல்படும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு பள்ளிகளுக்கு குவிந்து தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது போன்று ஏற்கனவே பலமுறை தனித்தனியாக பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது அதிக எண்ணிக்கையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைநகர் டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
English Summary
Bomb blast threaten in many schools in Delhi