#Breaking: ஊரடங்கு 3 ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. உற்சாகத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு, இரண்டாம் கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், கொரோனாவின் தொடர் தாக்கத்தால் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊரடங்கில் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு தற்போது அறிவித்து இருக்கிறது. இந்த ஊரடங்கு தளர்வில் யோகா மற்றும் ஜிம் பயிற்சி மையங்களை வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. திரையரங்குகளுக்கு தடை தொடரும்.

மேலும், தனிநபர்கள் இரவு நேரங்களில் நடமாட விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான தடைகள் தொடரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt of India Announce Third Stage of Relaxation


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->