#JustIN: கொரோனா இரண்டாம் பரவலை ஒழிக்க இதுதான் முடிவு - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவலை தடுக்க தகுதியுள்ளவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது நல்லாட்சிக்கான சோதனையாக நான் கருதுகிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்திய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் இரண்டாம்கட்ட பரவல் அலையை தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இது தொடர்பான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், " இந்தியா முழுவதும் 70 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையை தடுக்க நோய்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். 

கொரோனா பரவலை தடுக்க தகுதியுள்ளவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது நல்லாட்சிக்கான சோதனையாக நான் கருதுகிறேன். கொரோனா இரண்டாவது அலையை தடுக்க நாம் ஒன்றிணைய வேண்டும். 

பெரிய நகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகரங்கள் மற்றும் கிராம பகுதியிலும் கொரோனா சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சிக்கான சோதனையாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருந்தாலும், அதனை வெற்றிகரமாக வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது " என்று தெரிவித்தார்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona Virus Precaution Activity Prime Minister Narendra Modi Speech about Second Wave 17 March 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->