மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி செயலாளரை கொலை செய்த காதலன், கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
DYFI leader Murder In Kerala
இளம்பெண்ணை காதலன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தின் கோதனல்லூர் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளராக செயல்பட்டு வருவபவர் சூர்ய பிரியா. இவர்சித்திலஞ்சேரிக்கு அருகே உள்ள கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுஜீஸ் என்பவரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த சஜீஸ் அவரை கழுத்தை அறுத்து ஒலை செய்துள்ளார். அதன்பின்னர், காவல்நிலையம் சென்ற அவர் காதலியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது பிரியா பிணமாக கிடந்துள்ளார்.
அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DYFI leader Murder In Kerala