கட்சிகள் "தண்ணீர் பந்தல் திறக்கலாம்".. நிபந்தனையுடன் ECI அனுமதி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

தண்ணீர் பந்தல் திறப்பின் மூலமாக அரசியல் கட்சிகள், வேட்பாளர் எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களையும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் வழிக்காட்டுதல் வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI approved Parties can open water pandal with condition


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->