மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்..!
Fire mans rescue the car In pune
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்து மூவரை காவல்துறையினர் மீட்டனர்.
மகராஷ்டிரா மாநிலம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது.புனே நகரில் ஏற்பட்ட கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது ஆற்றின் கரையோரமாக இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில், பால்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் புனேவிற்கு காரில் வந்தனர்.
எதிர்பாராத விதமாக அவர்களின் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு பணியில் இருந்த தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி காரில் கயிற்றை கட்டினர். அதன்பின், கிரைன் மூலம் காரை காரை மீட்டனர். காரிலிருந்த குணால் லால்வானி (வயது28), அவரது மனைவி பிரியா (22), கபில் (21), வஞ்சிகா (13), கிருஷ்ணா (8) ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
English Summary
Fire mans rescue the car In pune