தினமும் 20 பேர் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்... சிறுமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!
Girl Release a Shocking Video
பல ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்வதாக சிறுமி கூறி இருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் சிறுமி ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். முதல் வீடியோக்கள் தனி ஒருவர் கற்பழிக்க வருவதாகவும் அவரிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் தாய் தந்தை மற்றும் மாமா பணத்திற்காக வரை விற்பதாகவும் இதனால் பல ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும், கிராம தலைவர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
தினமும் 20 முதல் 25 பேர் வரை அவரை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அவரது அம்மா சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்து வருவதாகவும் அதை அருந்திவிட்டு காவலர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வீட்டில் எனக்கு யாரும் உதவ மாட்டார்கள் இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்களாவது எனக்கு உதவ வேண்டும். இல்லை அவர்கள் என்னை கொலை செய்து விடுவார்கள் என்று கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறியுள்ளார். மேலும் காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து ஒரு முறை புகார் அளித்ததாகவும் அங்கு வந்த காவலர்கள் வீட்டை முழுமையாக சோதனை நடத்தினர் பெற்றோர் காவலர்கள் பணம் கொடுத்த சமாளித்ததாகவும் இதனால் கோபம் அடைந்த தந்தை அவரை பலாத்காரம் செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய் தந்தை உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Girl Release a Shocking Video