மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவன்.. அதிர்ச்சி தரும் வீடியோ.. கணவனுக்கு வலைவீச்சு..!
Husband attack his wife in Uttarpradesh
மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடும் முழுவதும் குடும்ப வன்முறை அதிகரித்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிராக பல சொல்ல முடியாத கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் அர்சேனா கிராமத்தை சேர்ந்தவர் ஷயம்பிஹாரி. இவருக்கு திருமணமாகி குஷ்மா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், ஷயம்பிஹாரி அவரது மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவர் மனைவியை இழுத்து சென்று அங்குள்ள மின்கம்பத்தில் மனைவி குஷ்மாவை கயிற்றால் கட்டி கட்டையால் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், பல தரப்பினரும் இதற்கு கண்டன தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கணவன் மீதும் அவரது மாமியார் மீதும் குஷ்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கணவனை தேடி வருகின்றனர்.
English Summary
Husband attack his wife in Uttarpradesh