திருமணமாகி மூன்றே மாதத்தில் மனைவியை கொலை செய்த கணவன்.. சந்தேகத்தால் நடந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


மனைவி மீது சந்தேகத்தால் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நிகிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில நாட்களிலேயே வெளிநாடு சென்ற அவர்கள் சில நாட்களுக்கு முன் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை நிகிதா தூங்கி கொண்டிருந்த நிகிதாவை குத்துவிளக்கால் தாக்கியுள்ளார்.

நிகிதாவின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அனீஷின் வீட்டிற்கு வந்தனர்.அப்போது ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனீஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband Killed His wife in Kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->