விடியவிடிய நடந்த துப்பாக்கி சூடு.. 3 பயங்கரவாதிகளை அதிரடியாக சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்.!
Jammu Kashmir Pulwama 3 Terrorist Encounter by Indian Army and CRPF Jammu Police
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா கஹாபுரா பகுதியில், பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதன்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தினர். மேலும், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் கூடுதலாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது.
நேற்று மாலை தொடங்கிய சண்டை இரவு முழுவதும் தொடர்ந்து, காலை வரை நீடித்த நிலையில், இறுதியில் காலை 10 மணியளவில் 3 பயங்கரவாதிகளும் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Jammu Kashmir Pulwama 3 Terrorist Encounter by Indian Army and CRPF Jammu Police