கர்ப்பிணி பெண்மணிக்கு பிரசவ வலி.. ஊரடங்கால் கைவிரித்த ஓட்டுநர்.. அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹனகல் நகர் பகுதியை சார்ந்தவர் வாசவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலியானது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வலி பொறுக்க இயலாமல் அலறி துடிக்கவே, இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் வாசவியின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர். இதன்பின்னர் வாசவியை மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தை தேடி அலைந்துள்ளனர்.

ஆனால், முழு ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டிகள் மறுப்பு தெரிவிக்கவே, வாசவியின் கணவர் செய்வதறியாது திகைத்துள்ளார். வாசவியின் உறவுக்கார பெண்ணான பிரியங்கா என்பவர் உப்பள்ளி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு தொடர்பு கொண்டு நிலைமை குறித்து எடுத்துரைத்துள்ளார்.

பின்னர் வீடியோ கால் செய்யும்படி மருத்துவர் பிரியங்கா கூறவே, வீடியோ கால் மூலமாக பெறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், வாசவியின் உறவுக்கார பெண்கள் மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா மற்றும் சிவலீலா ஆகியோர் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து குடும்பமே பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், குழந்தையை மருத்துவர் பிரியங்காவிற்கும் காட்டியுள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கவே, பின்னர் அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஹனகல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka pregnant girl Delivery baby Doctors consultation by video call


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->