4 வருடமாக பெண்ணை கற்பழித்து, அவரது மகளுக்கும் மிரட்டல்.. காவல் ஆய்வாளரின் கொடூரம்.!
Karnataka Shivamogga Sagar Police Inspector Sexual Abuse woman Last 4 Years 30 March 2021
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா சாகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அசோக் குமார். இவரின் மீது 40 வயது பெண்மணி பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், " நான் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக வழக்கு தொடர்பாக சாகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருந்தேன். இதன்போது, அங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த அசோக் குமார் என்னிடம் புகாரை பெற்றுக்கொண்டு, எனது அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நிலையில், வழக்கு தொடர்பாக நேரில் பேச வேண்டும் என்று கூறி ஒரு இடத்திற்கு வரவழைத்தார். நான் அங்கு சென்ற பின்னர் குடிக்க பாலும், குளிர்பானமும் வழங்கினார். இதனைக்குடித்த சிறிது நேரத்திற்கு உள்ளாகவே நான் மயங்கிவிட்டேன்.
மயக்கத்தில் இருக்கையிலேயே என்னை பாலியல் பலாத்காரம் செய்த அசோக் குமார், அதனை விடியோவாக பதிவு செய்து புகைப்படமும் எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் இதனை வைத்து என்னை மிரட்டி கடந்த 4 வருடமாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார். என்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் பலனில்லை. எனது இரண்டு மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இதனால் நான் உடலளவிலும், மனதளவிலும் பல துன்பங்களை அனுபவித்துள்ளேன். அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அசோக் குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karnataka Shivamogga Sagar Police Inspector Sexual Abuse woman Last 4 Years 30 March 2021