தற்கொலை செய்ய முடிவெடுத்து மகன், தங்கையை பலிகொடுத்த பெண்.. கண்ணீரை வரவழைக்கும் சோகம்..! - Seithipunal
Seithipunal


விஷம் கலந்து வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு, ஐந்து வயது மகன் மற்றும் தாயின் சகோதரி பலியானதால் கேரள மாநிலத்தில் சோகம் ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (வயது 25). இவருக்கு திருமணம் முடிந்து ஐந்து வயதில் அட்வைத் மகன் இருக்கும் நிலையில், கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துச் சென்றுள்ளார். 

இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி இரவு தற்கொலை செய்ய முடிவெடுத்த வர்ஷா, ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி எலிமருந்தை கலந்து சாப்பிட்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு லேசான மயக்கம் ஏற்படவே, தனது அறைக்கு சென்று படுத்துள்ளார். 

ஆனால், மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ்கிரீமை அதே இடத்தில் வைத்துச் சென்ற நிலையில், வர்ஷாவின் ஐந்து வயது மகன் மற்றும் அவரது 19 வயது தங்கை திரிஷ்யா, ஐஸ்கிரீமை எடுத்து 
சாப்பிட்டுள்ளார். இதன்பின்னர், பிரியாணியும் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டிருந்த நிலையில், திடீரென இரவு வர்ஷாவின் மகன் வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளான். 

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அட்வைத்தை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து திரிஷியாவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், ஒரு வார காலம் கடுமையான சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்துள்ளார். 

விஷம் கலந்த ஐஸ்கிரீமை உண்ட பின்னர், தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருந்ததால் தற்கொலை முயற்சி செய்ததை வர்ஷா குடும்பத்தினரிடம் இருந்து மறைத்துள்ளார். குடும்பத்தினரும் பிரியாணியில் கோளாறு என்று நினைத்துக்கொள்ளவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவலாக வர்ஷாவின் தற்கொலை முயற்சி தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Kasaragod woman Suicide Attempt Failure and his Son and Younger Sister Died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->