ராகுல் காந்தி ஏன் பெண்கள் கல்லூரிக்கு செல்கிறார்?. அவரிடம் கவனமாக இருங்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சர்ச்சை பேச்சு.!
Kerala Marxist MP Speech about Rahul Gandhi Ladies College Visit 30 March 2021
கேரள மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி ராகுல் காந்தி தொடர்பாக இடுக்கி முன்னாள் எம்.பி மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த நிர்வாகி ஜாய்ஸ் ஜார்ஜ் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து பேசுகையில், " கொச்சியில் இருக்கும் மதர் தெரசா மகளிர் கல்லூரிக்குள் ராகுல் காந்தி கடந்த வாரம் சென்றுள்ளார். அங்கு மாணவிகளின் கோரிக்கையை ஏற்று தனக்கு தெரிந்த அகிடோ கலையை கற்றுக்கொடுக்கிறார்.
ஏன் அவர் பெண்கள் உள்ள கல்லூரிகளுக்கு சென்று எப்போதும் பேசுகிறார்?. பெண்களிடம் தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்கிறோம் என்று கூறி குனிந்து, வளைந்து நிற்க சொல்கிறார். பெண்கள் அருகே ராகுல் செல்லக்கூடாது. ராகுல் காந்தி பேசுகையில் பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவர் திருமணம் ஆகாதவர், சிக்கலை உருவாக்கிவிடுவார் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala Marxist MP Speech about Rahul Gandhi Ladies College Visit 30 March 2021