ராட்சசன் பட பாணியில் பள்ளிக்கு சென்ற 15 வயது சிறுமி.. பைக்குள் சடலமாக கண்டெடுப்பு.. திடுக்கிடும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தின் வசாய் எனும் பகுதியில் நைகாவன் பாலம் அருகில் மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலை அருகில் பை ஒன்று சந்தேகப்படும் வகையில் கிடந்துள்ளது. 

அந்த வழியாக கடந்து சென்ற ஒரு நபர் இது குறித்து வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் பையை திறந்து பார்த்த போது அதில் பெண்ணின் உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. 

அந்த உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்ட காயங்கள் இருந்தன. இதையடுத்து, வசாய் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அந்த பெண்ணின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அந்தேறி பகுகியில் 15 வயது கொண்ட ஒரு சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 

அவர் காலையில் பள்ளிக்கு சென்ற நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரவில்லை. எனவே, சிறுமியின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என்று போலிசில் புகார் கொடுத்துள்ளனர். இதன் பின், சிறுமியின் உடல் கிடைத்ததால், கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முதற்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra 15 years girl body found in a Bag


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->