விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை கடத்திய பணியாளர்.. அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்..!
Man kidnapped Children in Delhi
விளையாடி கொண்டிந்த குழந்தைகளை கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்கு டெல்லி மாயாபுரி பகுதியில் வசித்து வரும் ஐந்து வயது சிறுவன் மற்றும் இரண்டு வயது சிறுமி ஆகியோர் தங்கள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் அவர்கள் தனியே இருந்துள்ளனர். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் குழந்தைகளை கடத்தி சென்றுள்ளார். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்தனர்.
இதனை அடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் காரை சுத்தம் செய்யும் வேலை செய்யும் அஜய் என்பவர் குழந்தைகளை கடத்தி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த குழந்தைகளை மீட்டனர். மேலும் , அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man kidnapped Children in Delhi