மிதந்து வந்த மூட்டை.. கால்வாய் நீரில் குளித்த நபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.!
money bag on kerala water lake
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு நபர் கால்வாய் தண்ணீரில் குளித்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மூட்டைகள் அந்த கால்வாயில் மிதந்து வந்துள்ளது. இதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து உடனே அந்த மூட்டைக்கு அருகே சென்றுள்ளார்.
பின், இது என்ன மூட்டை என்று அவர் கத்தியை வைத்து கிழித்து திறந்து பார்த்தபோது அந்த மூட்டைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நிறைய 500 ரூபாய் நோட்டுக்கள் அதில் இருந்துள்ளன.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்ததில் அதில் போலி பணம் என்பதும், சினிமா எடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பண மூட்டைகளை போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டனர் அப்பகுதி மக்கள். இதுகுறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
money bag on kerala water lake