திருநங்கையுடன் தகாத உறவு.. கையும் களவுமாக சிக்கிய கணவன்.. மனைவி செய்த காரியத்தால் வியப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தின் காலஹந்தி மாவட்டத்தில் பகீர் (32 வயது) என்ற நபருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவர் கூலி தொழில் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 

தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருநங்கை சங்கீதாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அந்த மனைவிக்கு தெரியாமல் சந்தித்து பேசி வந்த நிலையில் ஒருநாள் மனைவியிடம் சிக்கிக் கொண்டனர். 

பின்னர் மனைவி என்ன விஷயம் என்று கேட்க தான் சங்கீதாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு அவருடைய மனைவி எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களது காதலை ஏற்றுக் கொண்டு தானே திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். 

அடுத்த சில நாட்களில் உறவினர்கள் ஆசிர்வாதத்துடன் தனது கணவர் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இப்பொழுது அந்த திருநங்கை சங்கீதா அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

odissa women marry for her husband and a transgender


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->