75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய வேண்டுகோள்.!!
PM Modi New Appeal to people of 75th independence day
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. நம் முன்னோர்கள் பலர் பல தியாகங்கள் செய்து கிடைத்த இந்த சுதந்திர தினம், வருடம் தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும். அரசு சார்பிலும் சுகந்திர தின விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுதோறும் மூவர்ணகொடிகளை பறக்க விட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
PM Modi New Appeal to people of 75th independence day