'இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாகவே உள்ளது; இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்'; பிரதமர் மோடி உறுதி..! - Seithipunal
Seithipunal


மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் மற்றும் நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக பதிவாகியுள்ளதற்குப் பிரதமர் மோடி பெருமிதம் அடைந்துள்ளதோடு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து மிக வலுவாக இருப்பதையே இந்த எண்கள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது;

"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக உள்ளது. 2025-26 நிதியாண்டின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 7.7 சதவீதமாகவும், அதன் நான்காவது காலாண்டில் 7.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இது நமது பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பலத்தையும், நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் வெற்றியையும், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. 

மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும் மற்றும் நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்'' என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi expresses pride that Indias growth momentum remains strong


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->