இனி வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
Ration items will be provided in search of a house
பஞ்சாபில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. மேலும் அம்மாநில முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு உதவி எண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பஞ்சாப் மக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது. மக்களைத் தொடபுக் கொண்டு அவர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை அலுவலர்கள் வழங்க உள்ளனர். இந்தத் திட்டத்தை மக்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Ration items will be provided in search of a house