பசியால் திருமணத்தில் சாப்பிட்ட கல்லூரி மாணவர்.. தண்டனை கொடுத்த உறவினர்கள்.. வைரல் வீடியோ.!
Relatives made the college student wash the dishes who ate at the wedding
அழையா விருந்தாளியாக திருமணத்திற்கு சென்று சாப்பிட்ட மாணவரை பாத்திரம் கழுவ வைத்து தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எம்பிஏ படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் ஜபல்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஆனால் இந்த திருமணத்திற்கு யாரும் இவரை அழைக்கப்படவில்லை.
திருமணத்திற்கு சென்ற இந்த மாணவர் நேரிடையாக செனறு சாப்பிட்டுள்ளார். அப்போது இவரை பார்த்த உறவினர்கள் யார் நீ? எதற்காக வந்தாய்? என கேள்வி கேட்டுள்ளனர்.
மேலும், சாப்பிட்டதற்காக சமையல் பாத்திரங்களை கழுவ வைத்துள்ளனர். இது குறித்து அந்த மாணவனிடம் கேட்டபோது சாப்பிட்டதற்காக வேலை செய்வதை போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Relatives made the college student wash the dishes who ate at the wedding