நாய் குரைத்ததால் இருதரப்பினர் இடையே மோதல்.. ஒருவர் பலி.. 5 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் நாய் குரைத்ததால் ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் பைரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் நாய் குறைத்ததால் இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பானது.

இதில் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்டதில் ஆறு பேர் காயமடைந்தனர். மேலும் படுகாயம் அடைந்த லால் முணி என்ற 50 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two families fight in Uttar Pradesh for dog


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->