#கேரளா || கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டிக்டாக் பிரபலம் கைது..! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் வினீத். டிக்டாகில் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளன. இவர் அவரது ரசிகர்களுடன் சமூகவலைதளங்களில் பேசி வந்துள்ளார்.  இவருக்கு கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவர் அந்த மாணவியிடம் டிக்-டாக்கில் பிரபலமடைவது எப்படி? என்பதை சொல்லி தருகிறேன் என கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த பெண்ணும் திருவனந்தபுரம் வந்துள்ளார். அங்கு கார் வாங்கபோவதாக கூறி அந்த இளம்பெண்ணையும் அழைத்து சென்றார். அவரை ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வீனித்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested in POCSO at Kerala


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->