களத்தில் இறங்கிய பாமக எம்.எல்.ஏ செய்த செயல்.! சுகாதாரமில்லாத தர்மபுரி அரசு பள்ளியில் அதிரடி.!
dharmapuri pmk MLA cleans govt school toilet
தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இலக்கியம்பட்டியில் அமைந்துள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது அந்த பள்ளியில் கழிவறைக்கு ஆய்வு செய்ய சென்றார்.
அங்கே வெளியில் செல்லும்போதே துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து தனது உதவியாளரை அழைத்து கழிவறைகளை சுத்தம் செய்ய தேவையான பிளீச்சிங் பவுடர், ப்ரஷ் உள்ளிட்டவற்றை வாங்கித் தர சொல்லியுள்ளார்.
பின்னர் பள்ளி மேலாண்மை குழு தலைவருடன் சேர்ந்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னிலையில் கழிவறையை சுத்தம் செய்தார். சுத்தம் செய்துவிட்டு இது போல தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏழை பள்ளி மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர்.
அவர்களது சுகாதாரத்தில் நாம்தான் அக்கறையுடன் செயல்பட வேண்டும். கழிவறைக்கு தேவையான பினாயில் உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்றால் என்னிடம் தெரிவியுங்கள். நான் வாங்கி தருகிறேன். தூய்மை பணியாளர்கள் பணிக்கு வரவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள். நானே வந்து தூய்மை செய்துவிட்டு செல்கிறேன்.
ஏழை பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான கழிப்பறைகளை அமைத்துக் கொடுப்பது நமது கடமை என்று கூறினார். அப்பகுதியில் நிறைய பயன்படுத்தாத கழிப்பறை கட்டிடங்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார். அத்துடன் அங்கே அதிகப்படியான கொசுக்கள் மொய்ப்பதையும் அவர் பார்த்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுத்து பள்ளி முழுவதையும் தூய்மைப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
இது குறித்து சட்டப்பேரவையில் அவர் ஏற்கனவே பேசியிருப்பதாகவும், பள்ளி கல்வித்துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் நேரடியாக சென்று முறையிட இருப்பதாகவும் உறுதியளித்தார்.
English Summary
dharmapuri pmk MLA cleans govt school toilet