ஓ.பி.எஸ்ஸுடன் கைக்கோர்க்கும்.. டிடிவி தினகரன்.?! நேர்க்காணலில் போட்டுடைத்த ரகசியம்.!
Dhinakaran about OPS joining in ammk
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அமுமுக தினகரன் பேட்டி அளித்த போது, அமமுக மற்றும் அதிமுகவின் தற்போது பிரச்சினைகள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து தற்போது காணலாம்.
அதில் தினகரன், " நான் தனிக்கட்சி துவங்கி நான்கு ஆண்டுகளாகி விட்டது. அதிமுக பிரச்சினையில் நான் இல்லை. அமமுக நடத்துகின்ற போராட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும். அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
டெல்லியில் உள்ள எங்கள் நலம் விரும்பிகள் அதிமுக மற்றும் அமமுக இரு கட்சிகளையும் இணைக்க முயற்சித்தனர். திமுக ஆட்சியை கைப்பற்ற கூடாது என்பதற்காக அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். எடப்பாடி பழனிசாமியின் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை.
அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவருக்கு முதல்வர் நாற்காலி கிடைக்கக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. எனவே டெல்லி மேலிடம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அவர் ஓ பன்னீர் செல்வத்திற்கு துரோகம் செய்துள்ளார்.
இதையேதான் அன்று சின்னம்மாவுக்கும் செய்தார். சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டால் அமமுக ஓபிஎஸுடன் சேர்ந்து செயல்படவும் தயங்காது. அதற்கும் நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், எந்த காலத்திலும் எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும் நாங்கள் சேரவே மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Dhinakaran about OPS joining in ammk