என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் - மருத்துவர் இராமதாஸ் உறுதி.! - Seithipunal
Seithipunal


என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள். உள்ளுர் மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலைக்கு வாய்ப்பளிக்க வழிவகை செய்யப்படும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

நெய்வேலி தொகுதி முத்தாண்டிக்குப்பம் பகுதியில் மருத்துவர் இராமதாஸ் பாமக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " மருத்துவர் நந்தகோபாலனின் மருமகன் நவீன் பிரதாப் தலைமையில் பாமகவில் 2000 பேருடன் இணைந்துள்ளார். ஜெகன் எனது அன்பு மகன். ஜெகன் மீது படுபாதகர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.

அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். பாமகவின் தேர்தல் பிரச்சாரங்களை அன்புமணியின் தம்பிகள், தங்கைகள், பாட்டாளி சொந்தங்கள், பாட்டாளி சிங்கங்கள் நடத்துகிறார்கள். ஜெகனை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள். 

தேர்தல் நிறைவுபெற்றதும் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். உள்ளுர் மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலைக்கு வாய்ப்பளிக்க வழிவகை செய்யப்படும். என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பல போராட்டங்களை நான் நடத்தியுள்ளேன். 

என்னைத்தொடர்ந்து அன்புமணி இராமதாஸ் தலைமையில் பல போராட்டம் நடத்தப்பட்டது. என்.எல்.சி மற்றும் அதனை சுற்றியுள்ள 50 கிராம மக்கள் நெய்வேலி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தது தொடர்பாக திமுக என்றாவது பேசியதுண்டா? " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Promise about NLC Contract Employee 22 March 2021 Election Campaign


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->