ஓ.பி.எஸ் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!
Jayakumar speech about OPS
ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓபிஎஸ் அவர்களை கட்சியிலிருந்து நீக்கி விட்ட பிறகு அவர் சுயேச்சை எம்.எல்.ஏ ஆகத்தான் செயல்படுவார் என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மனுவை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டு நீக்கிய பிறகு ஓபிஎஸ் அவர்களை சுயச்சை எம்எல்ஏவாக தான் பார்க்க வேண்டும் என்றும் அதைத்தான் பேரவை தலைவர் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் மாபெரும் சக்தி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஒருநாளும் அதிமுகவில் இனி அதிமுகவில் இணைத்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Jayakumar speech about OPS