ரஜினி பேசுவதை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் - வைகோ.! - Seithipunal
Seithipunal


 ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை, யாருக்கும் புரியவில்லை; அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என வைகோ கூறியுள்ளார்.

கோவை, காந்திபுரம் ம.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது, நடிகர் ரஜினி, ஆளுநரை சந்தித்துள்ளார். நடிகர் ரஜினி சொல்வது அவருக்கும் புரியவில்லை, யாருக்கும் புரியவில்லை.

ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என சொல்கிறார். மறுநாள் உறுப்பினர்களை சேர்க்க சொல்லி விட்டேன் என்கிறார். பின் அரசியலுக்கு வரவில்லை எனக்கூறி சென்று விடுகிறார். இதனால் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No one should take what Rajini says seriously Vaiko


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->