போட்டு பாருங்க ஓட்டை., அப்புறம் பாருங்க நாட்டை - சீமான் தேர்தல் பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


பறவைகள் இந்த உலகிற்கு எப்படி தேவையோ, அதனைப்போன்று விவசாயி சின்னத்தில் களமிறங்கும் நாம் தமிழரும் தமிழகத்திற்கு தேவை என்று சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் இறுதி முடிவுகள் மே மாதம் 2 ஆம் தேதி வெளியாகிறது. தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி, தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து களம்காண்கிறது.

இந்நிலையில், கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் பேசிய சீமான், " விவசாயி சின்னத்தில் போட்டு பாருங்க ஓட்டை (வாக்கை செலுத்துங்கள் என்று அவரது பாணியில் கூறினார்).. அப்புறம் பாருங்கள் நாட்டை. தமிழகத்தை கட்டாயம் நான் முன்னேற்றுவேன். பறவைகள் இந்த உலகிற்கு எப்படி தேவையோ, அதனைப்போன்று விவசாயி சின்னத்தில் களமிறங்கும் நாம் தமிழரும் தமிழகத்திற்கு தேவை. ஒருமுறை எனக்கு வாக்கு செலுத்தி பாருங்கள். தமிழகத்தையே மாற்றி காண்பிக்கிறேன் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Election Campaign Speech at Cuddalore Manjakuppam TN Election 2021


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->