#JustIn: கழகத்தினருக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கூட்டாக சேர்ந்து உத்தரவு..! - Seithipunal
Seithipunal


உயிர்மூச்சுள்ள வரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன்.. இது அம்மாவின் மீது ஆணை என அதிமுகவினர் சபதம் எடுக்க வேண்டுமென அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 ஆம் வருடத்தில் பிறந்தார். தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் ஆளுமையுடன், பல திட்டங்களை மக்களுக்காக அறிவித்து நிறைவேற்றிய புரட்சி தலைவி என்றும், அம்மா என்றும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா, தமிழக மக்களிடையே எம்.ஜி.ஆரை போல நீங்காத இடம்பிடித்து இருக்கிறார். 

இராணுவ கட்டுப்பாடுடன் அதிமுக கட்சியையும், தமிழக ஆட்சியையும் நடத்தி வந்த ஜெயலலிதா, மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாக்குடன் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இவரது பிறந்தநாள் வரும் இரண்டு நாட்களில் (24 பிப்ரவரி 2021) சிறப்பிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில், ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவையும், மக்களையும் காப்பாற்றுவோம் என அதிமுக கழக தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மாலை 6 மணிக்கு தீபமேற்றி அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர். 

எடுக்கப்படவேண்டிய உறுதிமொழி: 

" உயிர்மூச்சுள்ள வரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன்.. இது அம்மாவின் மீது ஆணை! " என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS and EPS Statement about Celebrate Former CM Jayalalithaa Birthday


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->