ரத்தத்தில் அணுக்கள் தான் ஓட வேண்டும் காங்கிரஸ் ஓடக்கூடாது - கமல்ஹாசனை விமர்சித்த சீமான்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த ஜனவரி 4ம் தேதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைந்ததை அடுத்து தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக நானும், கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாகலை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்க அண்ணன் கமல்ஹாசன் மீது எனக்கு நிறைய அக்கறை உள்ளது. அவர் ஒருமுறை ரத்த பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் ரத்தத்தில் அணுக்கள் தான் ஓட வேண்டும் தேவை இல்லாமல் காங்கிரஸ் எல்லாம் ஓடக்கூடாது.

 இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவோம் என கூறினார்கள் ஆனால் எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் மக்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற நினைக்கிறார்கள். நாங்கள் கருத்துக்களின் மூலம் வெற்றி பெற நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman speech about Kamal support Congress


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->