உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விபத்து..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மோதிலால் சிங்.

இவர் உத்தர பிரதேசத்தின் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 28-ல், மோதிலால் சிங் தனது காரில் மனைவியுடன் கோரக்பூரில் இருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்தார். காரை சந்தோஷ் குப்தா என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கொடூர விபத்துக்குள்ளனது.

இந்த கொடூர விபத்தின் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த விபத்தில் மோதிலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த மோதிலால் மனைவி வீணா சிங்கை மீட்டு கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பலியான மோதிலால் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மோதிலால் சிங் மறைவுக்கு உத்திரப் பிரதேச முதல்வர் யோகி இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh CM Yogi Adityanath special offer death in accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->