பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக்கி உள்ளோம் - பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் தனது வாக்கு அளித்தர் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் மத்திய பிரதேசம் கார்கோனில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகள் வாரிசுகளை பாதுகாத்து கட்சியை அவர்கள் வசம் ஒப்படைப்பதற்காக தேர்தலை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு உங்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. நான் உங்கள் ஆசிகளை எதிர்நோக்கி வந்துள்ளேன்.


 ஒரு வாக்கு  தேசத்தை உலகின்  5வது பொருளாதார நாடாக உருவாக்கியுள்ளது. பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கி உள்ளது. மகளிர் இடஒதுக்கியை உறுதி செய்துள்ளது. தற்போதும் நடக்கும் தேர்தல் வாக்கு ஜிகாத்துக்கும் ராம ராஜ்ஜியத்திற்கும் நடைபெறும் போர். இந்தப் போரில் யார் வெல்ல போகிறார்கள் என்றும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் வரலாற்றில் திருப்புமுனையே இந்தியா சந்திக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்  என்று பேசினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We have made a tribal woman the President of the Republic PM Modi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->