ஆன்மீக ரகசியங்கள்... அக்ஷய திருதியை நாளில் தங்கம் சேர்ப்பதற்கு அதிர்ஷ்டம் உள்ள ராசிகள்.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற 10ஆம் தேதி அன்று அக்ஷய திருதியை வருவதால் அந்நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்குவதற்கு அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அக்ஷய திருதியை நாளில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமான யோகத்தால் வாழ்வில் மிகச் சிறப்பான அதிர்ஷ்டம் உருவாகும். வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். தோட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். லாபம் அதிகரிக்கும். தொழில் உயர்வதற்கு தேவையான முயற்சிகளையும் முடிவுகளையும் எடுப்பதற்கு நல்ல காலமாக அமையும். அந்த நாளில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம். 

மிதுன ராசிக்காரர்களுக்கு அக்ஷய திருதியை மூலம் சுப நிகழ்வுகள் நடைபெறும். மங்களகரமான யோகத்தின் மூலம் பொன், பொருள் வந்து சேரும். சுபயோகத்தின் மூலம் உயர்வினை பெறுவீர். கடின உழைப்புக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கும். எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் வெற்றி மட்டுமே நிச்சயம். வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 

கடக ராசிக்காரர்களுக்கு அக்ஷய திருதியை நாளில் மங்கள யோகம் உண்டாகும். எதிர்பாராத மாற்றங்களும் வருமானமும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் பெறுவீர். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கான உகந்த காலம் இதுதான். வீட்டில் திருமணம் போன்றவற்றால் புது உறவுகளும் குழந்தை பேரு மூலமாக புதிய உறவும் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. 

அக்ஷய திருதியை நாளில் துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி, சேமிப்பு, பன்மடங்கு அதிகரிக்கும். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் வாய்ப்புகளும் வருமானத்திற்கான வாய்ப்புகளும் உயர்ந்து கொண்டே இருக்கும். பொருளாதார நெருக்கடி குறைந்து சம்பள உயர்வு ஏற்படும். சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akshaya Tritiya blessings rasikal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->