தமிழகத்தில் இன்று (03.12.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!
03.12.2022 power cut places in tamilnadu
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (டிசம்பர் 3ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
மன்னார்புரம் மற்றும் முசிறி துணை மின்நிலையங்களில் இன்று அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அரியலூர்
ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்
அவினாசி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
சூலக்கரை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கரூா்
நொய்யல் மற்றும் மலைக்கோவிலூர் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
03.12.2022 power cut places in tamilnadu