கொடநாடு வழக்கில்.. சொல்லி வச்ச மாதிரி 10 பேரும்.. பரபரப்பான நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் அரங்கேற்றப்பட்ட கொலை கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தன் ஜாய், சதீசன் உள்ளிட்ட 10 பேரில் ஒருவர் கூட ஆஜராகவில்லை. 

அரசு தரப்பில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் மட்டும் ஆஜராகினர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சொல்லி வைத்தார் போல் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் ஒரே நேரத்தில் ஆஜராகாமல் தவிர்த்ததால் உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.‌

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றவாளிகள் ஆஜராகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 accused not appeared in Kodanadu cases


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->