சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து வன்கொடுமை.. சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது..!
2 persons arrested in POCSO Near Puthukottai
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுகோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்தசிறுமிக்கு கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இதனை அடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 persons arrested in POCSO Near Puthukottai