சேலம் || இளம்பெண்களுக்கு சினிமா ஆசைக்காட்டி ஆபாச படம் எடுத்த இருவர் கைது..!
2 persons Arrested in Selam
சினிமா ஆசை காட்டி பெண்களை ஆபாசமாக படம் பிடித்து மோசடியில் ஈடுப்பட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் சத்திரியன். இவர் திரைப்பட அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில் ஜெயஜோதி என்ற பெண் உதவியாளராக பணியாற்றி வந்தார். சத்திரியன் தன்னை ஒரு இயக்குநர் என அறிமுகம் செய்து கொண்டு படத்திற்கு புதுமுக நடிகைகள் நடிக்க தேவை என விளம்பரம் செய்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் பலர் அவரை தொடர்பு கொண்டனர்.
வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை நடிப்பு பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற பெயரில் அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். அந்த அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணை பாலியல் திரைப்படத்தில் நடிக்க வற்புறுத்தியுள்ளனர்.
இதனால், அந்த அலுவகலத்தில் இருந்து வெளியேறிய அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் பலரை சினிமா ஆசைக்காட்டி மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்தும், பல இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதும் தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 persons Arrested in Selam