தூத்துக்குடி || மர்மமான முறையில் இருவர் கொலை.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், பூதலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் அவரின் இரண்டாவது மகனுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது மகன் வேலைக்கு சென்ற நிலையில் அவர் மட்டும் தனியே இருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவு தீடீரென ரத்த காயங்களுடன் அலறி கொண்டு வெளியே ஓடி வந்த அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் படுகொலை செய்யப்பட்டார் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இருவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 persons killed in Thoothukudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->