விருதுநகரில் பரபரப்பு சம்பவம்.. பள்ளிக்குச் சென்ற 2 குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர்கள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வக்கனாகுண்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ஜான்சிராணி. இந்த தம்பதிகளுக்கு முகேஷ் மற்றும் பிருந்தா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

இதில், கணவர் ரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஜான்சிராணி தற்போது வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் இருவரும் தாயுடன் செல்ல மறுத்ததால் வக்கனாகுண்டில் உள்ள தாத்தா சுப்பையா பராமரிப்பில் உள்ளனர். 

இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் சம்பவத்தன்று தாத்தா வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் குழந்தைகள் 2 பேரையும் கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறிந்து அறிந்த தாத்தா சுப்பையா காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காரியபட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 school children kidnapped in virudhunagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->