மரத்தில் மோதிய அப்பளம் போல நொருங்கிய கார்.. இரு பெண்கள் பரிதாப பலி..!
2 woman death in accident
கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், பெத்துரெட்டிபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. அவரது மகள் கர்பமாக உள்ள நிலையில், அவருக்கு சோறு சமைத்து கொடுக்கும் சடங்கிற்காக பழனிசாமி, சங்கரேஸ்வரி, அவர்களது மகன்கள் கனக தர்மராஜ்(40), சங்கர்(38), ராமர், மருமகள் முத்துலெட்சுமி(35), மற்றும் அவர்களது குழந்தைகள், உறவினரான அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை மருதாயி(55) உள்பட மொத்தம் 11 பேர் ஒரே திருச்செந்தூர் சென்றனர்.
இன்று காலை ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அருகே வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் சங்கரேஸ்வரி, மருதாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 woman death in accident